சென்னை விமானத்துக்கு குண்டு மிரட்டல்-மும்பையில் தரையிறக்கம்
சென்னை: மஸ்கட்டில் இருந்த சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் ஒன்று இருந்ததை அடுத்து அந்த விமானம் அவசரமாக மும்பையில் தரையிறங்கியது. பின்னர் அந்த மிரட்டல் உண்மையில்லை என கண்டுபிடிக்கப்பட்டு, மீண்டும் சென்னை வந்தது.
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து நேற்று முன் தினம் 25ம் தேதி ஓமன் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அதில் 135 பயணிகளும், 7 ஊழியர்களும் இருந்தனர்.
மதியம் 2.30 மணிக்கு சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானம் மும்பைக்கு அருகில் வந்து கொண்டிருந்த போது, விமானத்தின் பாத்ரூமில் ஒரு மிரட்டல் கடிதம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் நீங்கள் அனைவரும் மரணமடைய போகிறார்கள் என எழுதப்பட்டிருந்தது.
இந்த தகவல் உடனடியாக விமான கேப்டனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் பயணிகள் மற்றும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு மதியம் 1.15 மணிக்கு விமானத்தை உடனடியாக தரையிறக்க முடிவு செய்தார்.
இதையடுத்து மும்பை விமான நிலையத்தில் அனுமதிபெற்று அந்த விமானம் தரையிறங்கியது. அங்கு மும்பை விமான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தை முற்றிலுமாக சோதித்தனர். ஆனால், அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை. இதையடுத்து அந்த மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டிருப்பது உண்மை அல்ல என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அந்த விமானம் மும்பையில் இருந்து இரவு 9.45 மணிக்கு கிளம்பி சுமார் 8 மணி நேரத்துக்கு மேல் தாமதாக சென்னை வந்தது.












Click it and Unblock the Notifications