தமிழக ஆட்சியில் பங்கு-காங். மீண்டும் நெருக்கடி!

தமிழகத்தி்ல் காங்கிரஸ் ஆதரோடு திமுக ஆட்சி நடந்து வருகிறது. மத்தியில் திமுக உதவியோடு காங்கிரஸ் பதவியில் உள்ளது.
மத்தியி்ல் திமுக அமைச்சர்கள் பதவிகளை கேட்டு வாங்கி ஆட்சியில் இடம் பெறும் நிலையில் தமிழகத்தில் காங்கிரசையும் ஆட்சியில் சேர்த்துக் கொண்டு அமைச்சர் பதவிகளை வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
இந் நிலையில் ஜவஹர்லால் நேருவின் 45வது நினைவு தினம் இன்று சத்யமூர்த்தி பவனில் அனுசரிக்கப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்ச்சியில், காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் சுதர்சனம் தலைமையில் காங்கிரசார் நேருவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய சுதர்சனம்,
தமிழகத்தில் காங்கிரஸை வலுவான கட்சியாக மாற்ற சோனியா காந்தி திட்டமிட்டுள்ளார். அதன் அடிப்படையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் திமுக அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கு பெற வேண்டும் என்று நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மேலிடத்தை வற்புறுத்தி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் கருணாநிதி, காங்கிரஸ் மேலிடம் கேட்டால் யோசிப்போம் என்று தெரிவித்தார்.
மத்தியில் அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பிறகு இது தொடர்பாக முதலமைச்சரும், சோனியாவும் கலந்து பேசி விரைவில் நல்ல முடிவு எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் பங்குபெறுவது குறித்து சோனியா எடுக்கும் முடிவே இறுதியானது.
இலங்கை தமிழர்களின் நலனுக்காக மத்திய அரசு ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளது.
காங்கிரஸ் சமூக நீதிக்கு எதிரான கட்சி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார். கடந்த 5 ஆண்டு காலமாக நடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ராமதாசின் மகன் அன்புமணி அமைச்சராக பதவி வகித்தபோது, காங்கிரசின் சமூக நீதி பற்றி அவருக்கு தெரியவில்லையா?
இதற்காக நாங்கள் அன்புமணியை குறை கூறமாட்டோம். காங்கிரசை குறை சொல்வதை ராமதாஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்று சில காலமாக நின்று போயிருந்த கோரிக்கையை சுதர்சனம் மீண்டும் எழுப்பியுள்ளார். மத்திய அமைச்சரவையில் இத்தனை இடம், இந்தந்த துறை என்று காங்கிரசை திமுக நெருக்கி வரும் நிலையில் தமிழக காங்கிரசாரின் இந்தக் கோரிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
-
Rajiv Gandhi: செந்தில் பாலாஜியிடமே முறைத்து கொண்ட ராஜீவ் காந்தி? பதவி மாற்றத்திற்கு இதுதான் காரணமா? -
10 மாவட்டத்தில் திமுகவுக்கு ரெட் சிக்னல்.. கொங்கு நிலவரத்தால் சோகத்தில் அறிவாலயம்.. ஸ்டாலின் முடிவு! -
ஸ்டாலினா? எடப்பாடியா? விஜய்யா? நகர்ப்புறங்களில் யாருக்கு வாக்கு அதிகம்! வெளியான கருத்துக்கணிப்பு -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
தென் மண்டலத்திற்கு திமுக பக்கா ஸ்கெட்ச்.. களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம்.. பிரச்சாரத்தை தொடங்கினார் -
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
அடேங்கப்பா.. இது லிஸ்டுலேயே இல்லையே.. ஸ்டாலின் எடுத்த முடிவு.. மிக முக்கிய எம்எல்ஏவிற்கு நோ சீட்? -
+2 மாணவி கொலை சம்பவம்.. 2 நாட்களாக போராடுகிறோம்.. உடனே ஏன் வரலை.. கனிமொழியை கேட்ட உறவினர்கள்! -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
2026 சட்டமன்றத் தேர்தல்: 'தொண்டை கட்டியிருக்கு...' - கனிமொழியின் அந்தப் பதில்! என்னதான் நடக்கிறது? -
ஆள் பார்த்து போடுங்க.. இப்பவே உள்ளடி வேலை கையை மீறி போகுதே.. ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியுமா?












Click it and Unblock the Notifications