For Daily Alerts
Just In
மும்பை: இந்திய பங்குச் சந்தையில் காளையின் துள்ளல் தொடர்கிறது.
பெட்ரோல்-டீஸல் விலையில் இனி அரசு தலையிடாது என்ற மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவின் அறிக்கையைத் தொடர்ந்து எண்ணெய் நிறுவனப் பங்குகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இதனால் இன்று மட்டுமே 400 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸில் குறியீட்டெண்கள் உயர்ந்துள்ளன. நிப்டியில் 120 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளன.
ஓஎன்ஜிஸி, ரிலையன்ஸ் போன்றவற்றின் பங்குகள் விலை கணிசமாக உயர்ந்துள்ளன.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஏசிசி, ஜெய்ப்ரகாஷ் அஸோஸியேட்ஸ், டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ் பங்குகள் நல்ல விலைக்குக் கைமாறின.
அதே நேரம் சன் பார்மாசூட்டிகல்ஸ், டாடா பவர், கிராஸிம் போன்றவற்றின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.
நேற்றும் அதற்கு முந்தைய நாளும் கூட பங்குச் சந்தை நல்ல ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது.
ஆசியாவின் பிற பங்குச் சந்தைகளிலும் சாதகமான சூழலே நிலவுகிறது.
Comments
Story first published: Friday, May 29, 2009, 15:14 [IST]