4 மாவட்ட கலெக்டர்கள் இடமாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் நேற்றும் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டன. நான்கு மாவட்ட கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி வெளியிட்ட அறிக்கை:
சென்னையில் தொழில் மற்றும் வர்த்தக கூடுதல் ஆணையராக இருக்கும் எம். விஜயகுமார், பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக இருக்கும், ஆர்.சுடலைக்கண்ணன், ஈரோடு மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்ட கலெக்டரான மகேசன் காசிராஜன், சிவகங்கை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்க்கரை கூடுதல் ஆணையராக இருந்து வரும் சி.முனியநாதன், நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications