உறுப்பினர் அட்டை அவசியம்-அதிமுகவினருக்கு ஜெ
சென்னை: அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாகத் தங்களைப் பதிவு செய்து, புதிய உறுப்பினர் அட்டை பெற்றுள்ளவர்கள் மட்டுமே, கட்சியின் அமைப்புத் தேர்தலில் போட்டியிட முடியும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுகவில் ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், கழகத்தில் புதிதாக உறுப்பினராக சேருவதற்கும், விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் வழங்கப்பட வேண்டிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் தலைமைக் கழகத்தில் தற்போது தயார் நிலையில் உள்ளது.
ஆகவே, விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து அதனை தலைமைக் கழகத்தில் ஒப்படைத்து ரசீது பெற்றுள்ள அனைவரும் தலைமைக் கழகத்திற்கு வந்து ரசீதை காண்பித்து, அதற்குரிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாகத் தங்களைப் பதிவு செய்து கொண்டு புதிய உறுப்பினர் உரிமை அட்டை பெற்றுள்ளவர்கள் மட்டுமே, நடைபெறவுள்ள கழக அமைப்புத் தேர்தலில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications