தோல்விக்கு பின் ஓய்வு- கோடநாடு செல்லும் ஜெ!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் கோடநாடு எஸ்டேட்டுக்கு ஓய்வுக்காக செல்லவுள்ளார்.
லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் அதிமுகவினரும், ஜெயலலிதாவும் பெரும் ஏமாற்றத்துக்கு ஆளானார்கள்.
தேர்தலில் ஜொலிக்க முடியாமல் போனதால் டெல்லி பக்கம் போக வேண்டிய அவசியம் ஜெயலலிதாவுக்கு ஏற்படாமல் போய் விட்டது.
இந் நிலையில் ஓய்வுக்காக அவர் கோடநாடு செல்லவுள்ளார். நாளை அவர் ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு செல்வதாக தெரிகிறது. அவருடன் தோழி சசிகலாவும் போவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா வருவதையொட்டி கோடநாடு எஸ்டேட் பங்களாவில் ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகின்றனவாம்.












Click it and Unblock the Notifications