For Daily Alerts
Just In
அடையார் ஆற்றின் மீது அமையும் ரன்வே!
சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை அடையார் ஆற்றின் மீது ரன்வே அமைக்கப்படவுள்ளது.
சென்னை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக அடையாரை ஒட்டியுள்ள பகுதிகளில் விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன.
இதன் ஒரு பகுதியாக ரன்வேயின் நீளம் அதிகரிக்கப்படுகிறது.
இதற்காக அடையார் ஆற்றின் மீதும் ரன்வே போடப்படவுள்ளது. இதற்காக தனியாக ஒரு பெரிய பாலம் கட்டப்படுகிறது. அதன் மேல் ரன்வே அமைகிறது. அதன் நீளம் 462 மீட்டர் கொண்டதாகவும், அகலம் 200 மீட்டராகவம் இருக்கும்.
ஆற்றின் மீது ரன்வே அமைக்கப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல் முறையாகும்.
ரூ. 156 கோடி செலவில் அமையும் இந்த ரன்வேயை 15 மாதங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரன்வே அமைப்பதற்கான பூமி பூஜை மணப்பாக்கத்தில் உள்ள அடையார் ஆற்றங்கரையில் நடந்தது.
Comments
Story first published: Friday, May 29, 2009, 14:13 [IST]