மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத் தீ
புளியங்குடி: நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து ஒரு வாரமாக காட்டு தீ எரிந்து வருகிறது.
முதலில் சேம்மத்தூநாதர் கோயில் பகுதியில் தொடங்கிய இந்த காட்டு தீ பின்னர் செட்டிகுளம் பகுதிக்கு பரவியது. அன்று மாலை பெய்த சாரல் மழையால் தீ அணைந்தது. பின்னர் நேற்று மாலை முதல் செல்லுக்குழி பீட்பகுதியில் உள்ள கோரப்பள்ளம் சரகத்தில் காட்டு தீ எரியத் துவங்கியுள்ளது.
தொடர்ந்து பல சதுர கிமீ தூரத்திற்கு ஒரே நேரத்தில் தீ எரிநது வருகிறது.
அதே போல சிவகிரி வனப் பகுதியை சேர்ந்த செல்லுபுளி மற்றும் தலையணை பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக காட்டூ தீ பரவி எரிந்து கொண்டிருக்கிறது. தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் தீ வேகமாக எரிந்து கொண்டிருப்பதால் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும் புகை மூட்டமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் யானை, கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகள் கிராமங்களுக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications