பர்னாலா ஓய்வு பெறுகிறார்-அடுத்த தமிழக ஆளுநர் யார்?
டெல்லி: தமிழக ஆளுநர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர்களான அர்ஜூன் சிங், சிவராஜ் பாட்டீல், சைபுதீன்சோஸ், சிஸ்ராம் ஓலா ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.
தற்போதைய ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக் காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. சமீபத்தில் அவருக்கு இருதய அறுவை சிகி்ச்சையும் நடந்தது. உடல் நிலை குன்றியுள்ள அவருக்கு மீண்டும் ஆளுநர் பதவி தரப்பட மாட்டாது என்று தெரிகிறது.
முதல்வர் கருணாநிதியால் விரும்பி ஆளுநர் பதவிக்கு அமர்த்தப்பட்டவர் பர்னாலா. 1990ம் ஆண்டு அப்போதைய சந்திர சேகர் அரசு ராஜிவ் காந்தி-ஜெயலலிதாவின் நிர்பந்தத்தால் விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி திமுக அரசைக் கலைக்க ஆளுநரிடம் அறிக்கை கேட்டது. ஆனால், அதைத் தர மறுத்த பர்னாலா தனது பதவியையே ராஜினாமா செய்துவிட்டுச் சென்றார்.
இதையடுத்து வேறு ஆளுநரை நியமித்து ஆட்சியைக் கலைத்தது சந்திர சேகர்-ராஜிவ்-ஜெயலலிதா-ஜனாதிபதியாக இருந்த ஆர்.வெங்கட்ராமன் டீம்.
இதனால் முதல்வர் கருணாநிதியின் அன்புக்குப் பாத்திரமானார் பர்னாலா. மத்தியில் கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி அமைந்தவுடன் பர்னாலாவையே மீண்டும் ஆளுநராக்க வைத்தார்.
இந் நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள அவரது பதவிக் காலம் இம் மாதத்துடன் நிறைவடைகிறது. அவருக்கு மேலும் பதவி நீடிப்பு கிடைக்காது என்று தெரிகிறது.
இதையடுத்து அடுத்த ஆளுநர் நியமனத்துக்கான பணிகளை மத்திய அரசு தொடங்கிவிட்டது.
மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள காங்கிரஸ் இம்முறை மூத்த தலைவர்களான அர்ஜூன் சிங், சிவராஜ் பாட்டீல், சைபுதீன்சோஸ் உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவியை தரவில்லை.
இவர்களுக்கு ஆளுநர் பதவிகளைத் தர காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் சிவராஜ் பாட்டீல் தமிழக ஆளுநர் ஆக விரும்புவதாகத் தெரிகிறது. ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவரான இவரை ஆளுநராக்குவதை திமுக விரும்பவில்லை என்று தெரிகிறது.
அர்ஜூன் சிங்குக்கு திமுக தரப்பி்ன் முழு ஆதரவு இருப்பதாகவும், அதே நேரத்தில் சைபுதீன் சோஸை தமிழக ஆளுநராக்க காங்கிரஸ் விரும்புவதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு தவிர மத்தியப் பிரதேசம், திரிபுரா, கேரளா ஆகிய மாநில கவர்னர்களும் இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகிறார்கள். மேலும் உத்திரபிரதேசம், மராட்டியம், கோவா, அரியானா, குஜராத் ஆகிய மாநில ஆளுநர்களின் பதவிக் காலமும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது.
புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னர் கோபிந்த்சிங் குச்சார் சமீபத்தில் காலமானார். இதையும் சேர்த்தால் 10 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட வேண்டியதுயுள்ளது.
கவர்னர்களைத் தேர்வு செய்யும் பணியை காங்கிரஸ் தலைமை ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது.
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வருகிற 9-ந்தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு புதிய ஆளுநர்கள் நியமனம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது
முதலில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கான ஆளுநர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications