For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொட்டு அம்மன் என்ன ஆனார்?-இலங்கை விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

Pottu Amman
கொழும்பு: விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன் பிடிபடவோ அல்லது அவரது உடல் இதுவரை மீட்கப்படவோ இல்லாத நிலையில், அவர் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளனவா என்பது குறித்து இலங்கை ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.

புலிகள் தலைவர் பிரபாகரனின் வலது கரமான பொட்டு அம்மன் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாவார்.

சமீபத்தில் நடந்த இறுதிப்போரில் பிரபாகரன் உள்பட விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பொட்டு அம்மன் குறி்த்து இலங்கை ராணுவத்திடம் எந்தத் தகவலும் இல்லை.

அவரது உடலும் கிடைக்காததால் அவரின் மரணம் குறித்தும் ராணுவம் இன்னும் விசாரணை நடத்திக் கொண்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X