நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து ஜெ.வுக்கு விலக்கு

இலங்கை தமிழர்களுக்காக தமிழக அரசின் சார்பில் நிதி திரட்டப்பட்டது குறித்து ஜெயலலிதா தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் மீது அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது.
இதை விசாரித்த நீதிமன்றம் நாளை ஜெயலலிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதி்ல், என் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணனும், தமிழக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் மாசிலாமணியும் ஆஜராகி வாதிட்டனர். வழக்கு விசாரணைக்கு தடை கூடாது என்று அரசு வழக்கறிஞர் கோரினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராமநாதன், ஜெயலலிதா மீது அவதூறு வழக்கு தொடர அனுமதியளித்த முதல்வர் கருணாநிதி, தமிழக அரசின் பொதுத்துறைச் செயலாளர், சென்னை நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
மேலும் நாளை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது ஜெயலலிதா நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கும் அளித்தார்.
வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications