6 கலை-அறிவியல் கல்லூரிகளில் புதிய படிப்புகள்
சென்னை: தமிழகத்தில் ஆறு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் புதிய படிப்புகள் அறிமுகமாகின்றன.
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 548 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சென்னை, வேலூர், மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி என ஆறு மண்டலங்களாக பிரித்து இயங்கி வருகின்றன.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து தற்போது இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகின்றன. இதுவரை தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்பங்ள் வரை விற்பனை ஆகியிருப்பதாக தெரிகிறது.
திருச்சி அதிகம், திருநெல்வேலி குறைவு...
பொருளாதார மந்தம் காரணமாக தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்பட்டுள்ள லேசான பின்னடைவு காரணமாக திருச்சி மாவட்டத்தில் 36,866 விண்ணப்பங்கள் விற்று தீர்ந்துள்ளன. தமிழகத்தில் அதிகளவு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் விண்ணப்ப விற்பனை இங்கு தான நடந்துள்ளது.
என்றாலும் திருநெல்வேலி மண்டலத்தில் சுமார் 3,869 விண்ணப்பங்கள் மட்டுமே விற்றுள்ளது. இப்பகுதியை சேர்ந்தவர்கள் பொருளாதாரம் விரைவில் சரியாகும் என்ற நம்பிக்கையில் என்ஜினியரிங் படிப்புக்கு அதிகளவில் விண்ணப்பத்திருப்பதாக தெரிகிறது.
இதை தவிர்த்து கோவை மண்டலத்தில் 28,684, வேலூர் மண்டலத்தில் 20,571, மதுரை மண்டலத்தில் 19,246, சென்னை மண்டலத்தில் 9,513 விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
ரிடைல் மேனேஜ்மெண்ட்...
இந் நிலையில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 6ல் புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
கரூர் அரசு கலைக் கல்லூரியில் பி.காம் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) படிப்பும், திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் எம்.எஸ்சி., (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்பும் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது. திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரியி்ல் பி.ஏ. (ஜர்னலிஸம் & மாஸ் கம்யூனிகேஷன்) அறிமுகப்படுத்தப்பட்டுள்லது.
சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பி.சி.ஏவும், சிதம்பரம் அரசு கலைக் கல்லூரி மற்றும் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரியில் பி.பி.ஏ. (ரிடைல் மேனேஜ்மெண்ட்) படிப்பும் புதிதாக துவக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications