மதுரை விமான நிலையத்துக்கு 353 ஏக்கர் நிலம் ஆஜிர்தம்
மதுரை: மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்த இதுவரை சுமார் 353 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவது சம்பந்தமான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதில் மதிவாணன் பேசுகையில்,
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக பெருங்குடி, கூடல் செங்குளம், வலையப்பட்டி, பாப்பனோடை, அயன்பாப்பாக்குடி மற்றும் குசவன்குண்டு ஆகிய கிராமங்களில் இருந்து நன்செய் நிலம் 36.04 ஏக்கரும், புன்செய் நிலம் 418.20 ஏக்கரும், புறம்போக்கு நிலம் 160.09 ஏக்கரும் என மொத்தம் 614 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கு ஏதுவாக 24 பிளாக்குகளாக பிரிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிக்காக 2 வட்டாட்சியர்கள், 4 வருவாய் ஆய்வாளர்கள், 2 உதவியாளர்கள், 4 நில அளவர், 2 புல உதவியாளர் மற்றும் 2 அலுவலக உதவியாளர் என 16 சிறப்பு பணியிடங்கள் நியமனம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், நில எடுப்பு பணிக்கு உதவியாக நிலம் அளவு செய்திட கூடுதல் நில அளவர் குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தனி வட்டாட்சியர்கள் மூலம் தணிக்கை செய்யப்பட்டு இதுவரை சுமார் 353 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதன் பேரில் நில உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அரசுக்கு நிலங்களை ஆர்ஜிதம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய அரசுக்கும் அறிக்கை அனுப்பபட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications