ஏசி வெடித்து குழந்தை உடல் கருகி பலி
தாம்பரம்: சென்னையில் ஏசி வெடித்து தீ பிடித்ததில் வருமான வரித்துறை அதிகாரி ஒருவரின் ஒன்றரை வயது பெண் குழந்தை உடல் கருகி பலியானது.
சென்னை சிட்லபாக்கம் எம்எம்டிஏ நகரை சேர்ந்தவர் ஸ்ரீவள்ளி (33). இவர் வருமான வரித்துறையில் பணியாற்றி வருகிறார். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் இவரது கணவர் சண்முகசுந்தரம் சமீபத்தில் வேலை காரணமாக சிங்கப்பூர் சென்றார்.
இதையடுத்து வீட்டில் ஸ்ரீவள்ளி தனது எட்டு வயது மகன் நாகர்ஜூனன் மற்றும் ஒன்றரை வயது மகள் மோனிஷா ஆகியோருடன் இருந்தார். ஸ்ரீவள்ளி வழக்கம் போல் குழந்தைகளுக்கு நேற்று இரவு சாப்பாடு கொடுத்துவிட்டு அவர்களுடன் ஏசி அறையில் தூங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை அவர்கள் வீட்டிலிருந்து புகை வருவதை பார்த்த அக்கம்பக்த்தினர் தாம்பரம் தீயணைப்பு நிலையத்துக்கும், சிட்லாபாக்கம் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
தீ வேகமாக பரவி வருவதை பார்த்த பொது மக்கள் போலீசார் வரும் வரை காத்திருக்காமல் வீட்டை உடைத்து உள்ளே சென்றனர். புகை வரும் அறையின் கதவையும் உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.
அப்போது ஏசி வெடித்து தீ பரவியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ஒன்றரை வயது குழந்தை மோனிஷா தீயில் கருகி பலியானது தெரியவந்துள்ளது.
வருமான வரித்துறை அதிகாரி ஸ்ரீவள்ளியும், அவரது மகனும் தீக்காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் கிடந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மின்சார கோளாறு காரணமாக ஏசி வெடித்து இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு எதாவது காரணமா என்று விசாரணை நடக்கிறது.
ஸ்ரீவள்ளியும், அவரது மகனும் மயக்கம் தெளிந்து விளக்கம் தந்தால் தான் எதையும் உறுதிசெய்ய முடியும் என போலீசார் கூறினர்.
-
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி!












Click it and Unblock the Notifications