இனி வன்னி வழியாக பயணிகள் விமானங்கள்!
கொழும்பு: இலங்கையின் ரத்மலானை மற்றும் பலாலி விமான நிலையங்களுக்கிடையிலான பாதையை மாற்றுகிறது இலங்கை அரசு.
இதுவரை வடக்கு இலங்கை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால், அப்பகுதி வழியாக விமானங்களை இயக்காமல் இருந்தது இலங்கை. ரத்மலானை விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்கள் யாழ் குடா கடல்புறத் தீவுகளைத் தாண்டி பலாலிக்கு வந்தது.
பலாலியிலிருந்து புறப்படும் விமானங்களும் இதேபோல சுற்றிக் கொண்டுதான் ரத்மலானைக்கு வந்து கொண்டிருந்தன.
இதனால் அதிக நேரம் மற்றும் எரிபொருள் விரயமாகி வந்தது.
இப்போது வடக்கு இலங்கையை முழுமையாக புலிகளிடமிருந்து விடுவித்துவிட்டதாக அறிவித்துள்ள இலங்கை அதற்காக நேற்று வெற்றிவிழா கொண்டாடியது.
அதன் ஒரு பகுதியாக ரத்மலானை-பலாலி விமான சேவையை இனி வன்னி வழியாகவே மேற்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் முதல்முறையாக பயணிகள் விமானங்கள் வன்னி நிலப்பகுதி மார்க்கமாக நடைபெறுகிறது. இதனால் பயண நேரம் 20 நிமிடங்கள் வரை குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications