கேரளா செல்லும் ரயில்களில் கூடுதல் பெர்த்கள்!

கடந்த சில வருடங்களாக தமிழகத்தின் வசம் இருந்து வந்த ரயில்வே இணை அமைச்சர் பொறுப்பு இந்த முறை கேரளாவைச் சேர்ந்த இ. அகமதுவுக்குப் போய் விட்டது.
இதனால் தமிழக ரயில் திட்டங்களுக்கும், பயணிகளுக்கான வசதிகளுக்கும் பாதிப்பு வரும் என்ற இயல்பான அச்சம் உள்ளது.
இந் நிலையில் கேரளாவின் வட பகுதியில் உள்ள நகரங்களுக்கு சென்னையிலிருந்து செல்லும் ரயில்களில் படுக்கை வசதிகளை அதிகரித்துள்ளார் அகமது.
அதாவது சென்னையிலிருந்து கண்ணூர், கோழிக்கோடு, தலிசேரி, திரூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் 75 சதவீத அளவுக்கு படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அகமது தலைமையில் நடந்த தெற்கு ரயில்வே ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த முடிவின்படி சென்னை சென்டிரல் - மங்களூர் மெயில்கள், சென்னை சென்டிரல் - மங்களூர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள், சென்னை சென்டிரல் - மங்களூர் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள், சென்னை எழும்பூர்- மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயி்ல்களில் கேரள பயணிகளுக்காக படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படுகின்றன.
தற்போது இந்த ரயில்களில், ஷோரனூர் வரையில் உள்ள நிலையங்களுக்கு மட்டுமே படுக்கை வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் புதிய உத்தரவின் மூலம் புதிதாக 2943 படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications