லஷ்கர் தலைவர் சயீத்துடன் மத்னிக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது - ப.சிதம்பரம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் கைது செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவரான மத்னிக்கு, அந்த அமைப்பின் நிறுவனரான ஹபீஸ் சயீத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், டெல்லியில் கைது செய்யப்பட்ட நபருக்கும், ஹபீஸ் சயீத்துக்கும் தொடர்பு உள்ளது.
டெல்லி போலீஸாரின் இந்த துரித நடவடிக்கை, நமது புலனாய்வு அமைப்புகளுக்கும், காவல்துறைக்கும் இடையிலான நல்ல ஒத்துழைப்பையும், பரஸ்பர தகவல் பரிமாற்றத்தையும் நிரூபிப்பதாக உள்ளது என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications