பயணிக்கு நெஞ்சுவலி-சென்னையில் விமானம் அவசர தரையிறக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிங்கப்பூரில் இருந்து லண்டன் சென்று கொண்டிருந்த விமானத்தின் பயணிக்கு ஒருவருக்கு நடுவானில் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து விமானம் அவசரமாக சென்னையில் தரையிறங்கியது.

சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு 150 பயணிகளுடன் விமானம் ஒன்று லண்டன் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதிகாலை 1.50 மணிக்கு மேல் விமானம் சென்னைக்கு அருகே வந்து கொண்டிருந்த போது விமானத்தில் இருந்த சுவிட்சர்லாந்தை சேர்ந்த 75 வயது பயணி ஜான்சன் என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதையடுத்து விமானியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை விமான நிலையத்தை தொடர்பு கொண்டு விஷயத்தை விவரமாக எடுத்து கூறி அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார்.

சென்னை விமான நிலையத்தில் சாதகமான பதில் வர விமானம் சென்னையில் தரையிறங்கியது. இதையடுத்து அந்த பயணி அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் வந்த மற்றொரு பயணி அவருக்கு துணையாக மருத்துவமனையில் இருக்கிறார்.

இதையடுத்து மற்ற பயணிகளை ஏற்றி கொண்டு விமானம் சுமார் 1 மணி நேரம் தாமதமாக மீண்டும் லண்டன் புறப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+