மலையாளி கொல்லப்பட்டிருந்தால் ராஜபக்சேவுடன் நாராயணன் கை குலுக்கியிருப்பாரா?-சீமான்

பெங்களூரிர், கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம் நேற்று காலை நடைபெற்றது.
அதற்கு முன்னதாக பெங்களூர் கிழக்கு ரயில் நிலையம் அருகே உள்ள திடலில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
கர்நாடகத் தமிழ் மக்கள் இயக்க தலைவர் சி.இராசன் தலைமை உரையாற்றினார். கூட்டத்தி்ல இயக்குநர் சீமான் சிறப்புரையாற்றினார்.
தமிழீழ எதிர்ப்புப் போக்கை கடைப்பிடிப்பதைக் கண்டித்து தினகரன் நாளிதழ் தீவைத்து எரிக்கப்பட்டது.
சீமான் பேசுகையில்,
இனவெறி பிடித்த இலங்கை அரசு, சீனாவும், பாகிஸ்தானும் கொடுத்த ஆயுதத்தையும், இந்தியா கொடுத்த ஆயுதத்தையும், பயிற்சியையும் பயன்படுத்தி தமிழினத்தை முற்றாக அழிக்கப் பார்க்கிறது.
தமிழ் நிலத்தை சுடுகாடாக்கிவிட்டு, நாடு அமைதியாக இருப்பதாக கொக்கரிக்கிறது. இந்த அமைதியில், சிங்களவன் நிம்மதியாக இருக்கமுடியாது.
இனி, புலிகள் மரபு வழி யுத்தம் செய்யப் போவதில்லை.
சிங்களவனே, நீ ஒரு பள்ளியில் குண்டு போட்டால், புலிகளின் குண்டு பத்து பள்ளிகளின் மேல் விழும்.
ரத்த உறவுகள் மானபங்கபடுத்தப்பட்டு, கொல்லப்படும் வேதனையை தமிழன் மட்டுமே அனுபவித்து வந்தான்,
இனி இந்த கொடுமைகளையெல்லாம் சிங்களவன் அனுபவிக்க போகிறான். அப்போது, மனித உரிமை பற்றிப் பேச எந்த வல்லாதிக்க அரசுக்கும் அருகதை கிடையாது.
தமிழினத்தை சொந்த மண்ணிலே, முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்கிறான் சிங்களவன்; அந்த சிங்களவனுக்கு ஆதரவாக, ஐ.நா. மன்றத்தில் முதல் கையெழுத்துப் போட்டு ஆதரவு தெரிவிக்கிறது இந்தியா.
ஒரு மலையாளி கொல்லப்பட்டிருந்தால், நாராயணன் பல்லிளித்துக் கொண்டு ராஜபக்சவுடன் கை குலுக்குவானா?
வழக்கை முடிக்க இறப்பு பத்திரம் கேட்கிறான். அடேய் பாவி, உனக்கு வழக்கு முடிக்க தமிழினத்தின் வாழ்க்கையா முடிய வேண்டும்?
ஒரு மலையாளி கொல்லப்பட்டிருந்தால், ஏ.கே அந்தோனி ஆயுதம் கொடுப்பாரா??
சிங்களவன் தமிழச்சி சேலையை உருவி மானப்பங்கபடுத்தறான். அந்த சிங்களவனிடம் கை குலுக்கிட்டு வந்து தமிழ்நாட்டில் நம் தமிழ் தாய்மார்களுக்கு சேலை கொடுத்து வாக்கு கேட்கிறான்… என்ன மானங் கெட்டத் தனம்?
குடும்ப நலனுக்காக இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா?
இனத்தைக் காக்க குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா??
மே-17 ந்தேதி, பிரபாகரன் இறந்துவிட்டதாக செய்தி வந்தவுடன் தமிழ்நாடே இழவு வீடாகி போனது. தமிழினமே செத்துப் போனது.
பிரபாகரன் நலமாக உள்ளார் என்ற செய்தி கிடைத்தவுடனே, தமிழினமே உயிரெழுந்தது. இப்போது புரிந்து கொள்ளுங்கள்…. தமிழினத்தின் உயிர் யார்? என்பதை….
தமிழினத்தின் ஜீவநாடி, பிரபாகரனின் கையில் தான் உள்ளது.
கம்யூனிச நாடுகளான சீனமும், கியூபாவும், வியட்நாமும் கூட சிறிலங்காவிற்கு ஆதரவளிப்பதேன்? ராஜபக்ச காட்டியும், கூட்டியும் கொடுப்பதால் தான்…..
சீனாவிற்கு அம்பாந்தோட்டையில் துறைமுகத்திற்கு நிலம் தருகிற ராஜபக்ச தேசியவாதியா?
அன்னை நிலத்தை, அந்நியனுக்கு தராமல் போராடும் பிரபாகரன் தீவிரவாதியா?
அன்று, பண்டாரவன்னியனுக்கு ஒரு காக்கை வன்னியன்!
கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன்!!
இன்று, பிரபாகரனுக்கோ….."கருணா"க்கள் !!!
துரோகிகளாலேயே, இந்த இனம் தொடர்ந்து வீழ்த்தப்படுகிறதே என்றார் சீமான்.
கூட்டத்தின்போது ராஜபக்ச உருவபொம்மை தூக்கிலிடப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டது. சோனியா,கருணாநிதி ஆகியோரை தமிழின இரத்தம் குடிக்கும் எதிரியாக,துரோகியாக… உருவகப்படுத்தி, பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications