என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
நெய்வேலி: ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்க பொது செயலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நெய்வேலி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.
என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் சிலர் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் மூலம் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 15ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இச்சங்கத்தினர் அதற்கான அறிவிப்பை ஊர்வலமாக சென்று என்எல்சி தலைமை அலுவலகத்தில் கொடுத்தனர்.
இதையடுத்து நெய்வேலி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் பணியாற்றும் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் வெங்கடேசன் வேலைக்கு சென்றபோது, அவரை வேலை செய்ய ஒப்பந்தக்காரர் அனுமதிக்கவில்லை. மேலும் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவி்ததுள்ளது.
இது தொடர்பாக நிர்வாகத்திடம் அவர் கேட்ட போது ஒப்பந்தக்காரர்கள், நீங்கள் இரவுநேர பணிக்கு மட்டுமே வருகிறீர்கள். சில நாட்கள் தொடர்ந்து விடுமுறை எடுத்து கொள்கிறீர்கள் என கூறியுள்ளது. இந்த விஷயத்தில் தங்களால் எதுவும் செய்ய முடியாது என நிர்வாகம் கூறிவிட்டது.
இதை கண்டிக்கும் விதமாக இரண்டாவது அனல் மின் நிலையம் மற்றும் இரண்டாவது சுரங்கத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications