எஸ்எஸ்எல்சி 'டாப் 1100' மாணவர்களுக்கு லேப்-டாப்
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் வழியில் எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்ற 1,100 மாணவர்களுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி லேப்-டாப் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி முதல் 1000 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடிதத்வர்களுக்கு இதுவரை தலா ரூ. 7 ஆயிரம், ரூ. 6 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் என வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகையை முறையே ரூ. 25 ஆயிரம், ரூ. 20 ஆயிரம் மற்றும் ரூ. 15 ஆயிரம் என உயர்த்தி முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.
இந்நிலையில் இன்று இந்த ஆண்டு முதல் 1,100 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு லேப்-டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார். இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 3 கோடியே 26 லட்சத்து 45 ஆயிரமாகும்.
கருணாநிதி முதல் கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 10 மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கினார். மேலும், அரசு பொது தேர்வில் 496 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடம் பிடித்த கன்னியாகுமாரி மாணவர் ஜோஸ்ரிஜனுக்கு ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலையை பரிசளித்தார்.
495 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது பிடித்த பாளையங்கோட்டை மாணவி ஹெப்சிபா பியூலா, மதுரை மாணவர் ஜேம்ஸ் மார்டின், கோபிசெட்டிபாளயைம் மாணவி சுஷ்மா, காவேட்டிப்பட்டி மாணவி அபிநயா, பட்டுக்கோட்டை மாணவர் துளசிராஜ் ஆகியோருக்கு தலா ரூ. 20 ஆயிரம் வழங்கினார்.
494 மதிப்பெண்கள் எடு்துத மாநில அளவில் மூன்றாவது இடம் பெற்ற அருப்புக்கோட்டை மாணவர் பாலச்சந்திரன், வேடசந்தூர் மாணவி உமா நந்தினி, கரூர் மாணவர் விமல் ஆகிய மூவருக்கும் தலா ரூ. 15 ஆயிரம் கொடுத்தார்.
அதே போல் மெட்ரிகுலேஷன் தேர்வில் முதலிடம் பிடித்த தூத்துக்குடி மாணவி பாலபிரிய தர்ஷனிக்கு (490) ரூ. 25 ஆயிரமும், 489 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவதாக வந்த காஞ்சீபுரம் மாணவர் தினேசுக்கு ரூ. 20 ஆயிரமும், 487 மதிப்பெண்கள் வாங்கி மூன்றாவது இடம் பெற்ற மதுரை மாணவி மிருணாஸ்ரீ, பெருந்துறை மாணவி சங்கவி ஆகியோருக்கு ரூ. 15 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கி பாராட்டினார்.
மொத்தம் 13 மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ. 2 லட்சத்து 45 ஆயிரம் வழங்கப்பட்டது. மாநில மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ, மாணவியர்களின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என்பதற்கான சான்றிதழையும் முதல்வர் அவர்களிடம் வழங்கினார்.
பரிசுகளை பெற்ற மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications