தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யலாம்
சென்னை: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் பெருவாரியான பகுதிகளி்ல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழக கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. கூடவே பலத்த காற்றும் வீசி வருவதால் மக்கள் பீதியுடன் உள்ளனர்.
பெளர்னமி, கடலில் ஏற்பட்ட புயல் சின்னம், தென் மேற்குப் பருவ மழையின் தொடக்கம் என்று இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகிறது.
இந்த தொடரும் கடல் சீற்றம் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் போக முடியாமல் தவித்துக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் மாலை அல்லது இரவில் ஒரு சில பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தரைக்காற்று அவ்வப்போது அதிகமாக வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்குப் பருவ மழை மீண்டும் சூடு பிடித்துள்ளதால் நெல்லை, குமரி மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குற்றாலத்தில் சீசன் முழு வீச்சில் தொடங்கியுள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications