ஆஸி-இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட இந்தியர்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்தியாவைச் சேர்ந்த கமல்ஜித் சிங் என்ற மாணவர் 2வது முறையாக இனவெறியர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல் நின்றபாடில்லை. சகட்டு மேனிக்கு இந்திய மாணவர்களை இழிவாகத் தாக்கி வருகின்றனர் ஆஸ்திரேலியர்கள்.
ஆனால் இதையெல்லாம் சாதாரணக் குற்றச் செயல்கள்தான், இனவெறித் தாக்குதல் இல்லை என்று கோமாளித்தனமாக கூறிக் கொண்டிருக்கிறது ஆஸ்திரேலிய காவல்துறை.
கடந்த 30 நாட்களில் 10 இந்தியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இது போதாதென்று 3 இந்தியர்களின் கார்களும் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கமல்ஜித் சிங் என்ற மாணவர் மெல்போர்ன் நகரில் தாக்கப்பட்டார்.
கடந்த மாதம் இவரை ஒரு கும்பல் முட்டைகளை வீசித் தாக்கியிருந்தது. இந்த நிலையில் 2வது முறையாக நேற்று இவர் நள்ளிரவில் தாக்கப்பட்டார்.
ஆஸ்திரேலிய இளைஞர்கள் சிலர், கமல்ஜித்தை வழிமறித்து இரும்புக் கம்பிகளால் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது.
இதையடுத்து மயங்கி கீழே விழுந்தார் கமல்ஜித். பின்னர் அக்கும்பல் அங்கிருந்து ஓடி விட்டது. கமல்ஜித்தின் நிலையைப் பார்த்த சக இந்திய மாணவர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.












Click it and Unblock the Notifications