போர் ஓய்ந்தும் கூட ஈழத்தில் தமிழர்கள் கஷ்டம் தீரவில்லை - கனிமொழி
டெல்லி: இலங்கையில் போர் ஓய்ந்தும் கூட அங்கு தமிழர்களின் கஷ்டங்களுக்கு இன்னும் விடிவு பிறக்கவில்லை. அங்கு நிலையான தீர்வு ஏற்பட இந்தியா உதவ வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி, ராஜ்யசபாவில் கோரினார்.
ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்து வருகிறது.
இதில் கலந்து கொண்டு, கனிமொழி பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
இலங்கை தமிழர்களின் பாடுகள் பற்றி உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இலங்கையில் போர் முடிந்து விட்டது. மக்களின் கஷ்டங்கள் தீரவில்லை. ஏனெனில், அங்கு தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்படுகிறது.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் தமிழ் மக்களுக்கு வாழும் உரிமையும் மறுக்கப்பட்டு உள்ளது. அவர்களை சம குடிமக்களாக கருதப்படும் உரிமை மறுக்கப்படுகிறது.
எனவே, இலங்கையில் தற்போது போர் முடிந்துள்ள நிலையில் இந்திய அரசுக்கு பெரும் பங்கு உண்டு. அந்த மக்களை தங்கள் இல்லங்களில் குடிஅமர்த்த செய்வது, பரம்பரை வீடுகளில் வாழ வைப்பது, நிலையான அரசியல் தீர்வு காண்பதில் மத்திய அரசுக்கு பெரும் பொறுப்பு உள்ளது.
மகளிர் மசோதா
இன்னும் 100 நாட்களில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா அறிமுகம் செய்யப்படும் என்று குடியரசுத் தலைவர் கூறியுள்ளார். ஆனால், அந்த மசோதாவிற்கு ஏற்கனவே பல தடைகள் இருக்கின்றன.
இந்த மசோதாவை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று அச்சுறுத்தும் மக்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்த மசோதாவிற்கு தி.மு.க. உறுதியான ஆதரவு அளித்து உறுதுணையாக இருக்கிறது.
பாராளுமன்றத்தில் 543 உறுப்பினர்களில் தற்போது 58 மகளிர் மட்டும் உறுப்பினர்களாக இருக்கும் ஒரு வருத்தமான நிலை இருக்கிறது. இது 10 சதவீதம் மட்டும் ஆகும். மேல்-சபையில் 22 பெண் உறுப்பினர்கள் இருக்கின்றனர். இது 9.6 சதவீதம்தான்.
எனவே, நமது கொள்கை முடிவுகள் எடுக்கும்போது 50 சதவீதம் இருக்கும் பெண்கள் விடுபட்டுவிடாத வகையில் மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்ததாக ஜனாதிபதி உரையில் பெண் கல்வி பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
சமுதாயத்தின் மற்றொரு பிரிவான அரவாணிகளும் புறக்கணிக்கப்படுகின்றனர். சமுதாயத்தில் அவர்கள் எல்லா வகையான பாகுபாடுகளையும் அனுபவித்து வருகின்றனர்.
எனவே, அரசு அவர்களுக்கு உரிமையுள்ள குடிமக்களுக்கான அங்கீகாரம் அளிக்க வேண்டும். அரசு திட்டத்தின் பலன்கள் அவர்களுக்கும் போய் சேர வேண்டும். தேவைப்பட்டால் அரவாணிகளுக்கு தனியாக ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.
சேது சமுத்திர திட்டத்தை பல காரணங்களுக்காக பல கட்சியினர் தடை செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால், இந்தத் திட்டம் ஒவ்வொரு தமிழனின் கனவு ஆகும். இந்த திட்டத்தின் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும்.
சேது சமுத்திர திட்டம் மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் திட்டம் ஆகும். கடலோரப் பகுதிகளில் பல தொழிற்சாலைகள் வரும். துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். எனவே, இந்தத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்பது தமிழகத்திற்கும், தென்னகத்திற்கும் அநீதி இழைப்பதாகும்.
விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்ததற்காக பாராட்டுகிறேன். அது அவர்களின் பிரச்சினைகளை பெருமளவுக்கு தீர்த்து வைத்தது. ஆனால், மீனவர்களை நாம் விட்டுவிட்டோம். பருவகால மாற்றத்தால் மீனவர்கள் பாதிக்கப்படுவது பற்றி உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில்கூட கடல் கொந்தளிப்பால் மீனவர்களின் வீடுகள் அடித்து செல்லப்பட்டுவிட்டன. மீனவர்களால் மீன்பிடிக்க போக முடியவில்லை. இந்த மக்கள் மீண்டும், மீண்டும் பாதிக்கப்படுகின்றனர்.
ஆனால், அவர்களுக்கு பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை. அவர்கள் முழு அளவில் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர்.
கல்வியை எடுத்துக் கொண்டால் மீனவ சமுதாயத்தில் 2 சதவீதம் பேர்தான் படித்துள்ளனர். எனவே, அவர்களது கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும். நதிநீர் பங்கீட்டு விஷயத்தில் தமிழ்நாடு பாதிக்கப்பட்டு உள்ளது. இதில், மத்திய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றார் கனிமொழி.
-
வங்கதேசம் மட்டுமில்லை.. இந்தியாவிடம் கெஞ்சும் இலங்கை - மாலத்தீவு.. ஈரான் போரால் மாறிய நிலைமை -
"அந்த" விஷயத்திற்கு மாத்திரை சாப்பிட்ட இளைஞர்.. துடிதுடித்து மரணம்.. உடலை விட்டுவிட்டு ஓடிய காதலி -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
ஜிகிரி தோஸ்த்து.. நாங்க ஹெல்ப் பண்ணுவோம்! இக்கட்டான நேரத்தில் இந்தியாவுக்கு ஈரான் உதவி! மேட்டர் ஓவர் -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி












Click it and Unblock the Notifications