சென்செக்ஸில் 461 புள்ளிகள் உயர்வு
மும்பை: இந்தியப் பொருளாதாரம் விரைவில் மீட்சிப் பாதைக்குத் திரும்பிவிடும் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்ததால், இன்று மீண்டும் 500 புள்ளிகள் உயர்வு கண்டது இந்திய பங்குச் சந்தை.
வர்த்தக நேர முடிவுல் சென்செக்ஸில் இன்று 461 புள்ளிகள் உயர்ந்து 15,127.00 ஆக காணப்பட்டது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியில் 121 புள்ளிகள் உயர்ந்ததால் குறியீட்டெண் 4550 ஆக நிறைவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் அதிகபட்ச லாபம் (10 சதவிகிதத்துக்கும் மேல்) குவித்த பங்குகள் டிஎல்எப் நிறுவனத்தினுடையதுதான்.
ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஜெய்ப்பிரகாஷ் அஸோஸியேட்ஸ் போன்றவை நல்ல லாபத்தில் கைமாறின.
வங்கித் துறைப் பங்குகளிலும் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. சத்யம் நிறுவனப் பங்குகளின் விலை 10 சதவிகிதம் உயர்ந்தது.
நேற்றைய வர்த்தகத்தில் 500 புள்ளிகளை சென்செக்ஸ் இழந்ததை. இன்று அதே அளவு திரும்பப் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications