போதையில் கலாட்டா-நெல்லையில் ஏட்டு மகன் கைது
நெல்லை: நெல்லையில் குடித்துவிட்டு தெருவில் ரகளை செய்த போலீஸ் ஏட்டின் மகன் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆமீன்புரத்தைச் சேர்ந்தவர் முருகன். போலீஸ் ஏட்டாக இவரது தந்தை சங்கரபாண்டியன் மரணம் அடைந்துவிட்டார்.
இந்த நிலையில் இவர் தினமும் குடித்து விட்டு குடியிருக்கும் பகுதியில் கலாட்டா செய்து வந்துள்ளார்.
நேற்றும் நன்றாக குடித்து விட்டு எதிரே வருவோர், போவோரை அவதூறாக பேசி ரகளை செய்தபடி வீட்டுக்கு வந்தார். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் முருகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் பெரியசாமியை கண்டபடி பேசியுள்ளார். மேலும் அடித்து, ரகளை செய்துள்ளார்.
இதையடு்தது பெரியசாமியம், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கூட்டமாக திரண்டு சென்று அவர் மீது புகார் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று கலாட்டா செய்த முருகனை கைது செய்தனர்.