கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 72 டாலராக உயர்வு
சிங்கப்பூர்: பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் நடவடிக்கைகளில் உலக நாடுகள் தீவிரமாகிவிட்டதால், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 72 டாலராக உயர்ந்துவிட்டது.
இந்த ஓராண்டில் கச்சா எண்ணெய் விலை இந்த அளவு உயர்ந்திருப்பது இதுவே முதல்முறை. புதன்கிழமை மட்டும் 1.32 டாலர் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம் 30 டாலருக்கும் கீழே போனது கச்சா எண்ணெய் விலை. அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், தொடர்ந்து குறைந்த விலையிலேயே கச்சா எண்ணெய்யை விற்று வந்தன எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள். ஆனால் இப்போது அமெரிக்காவின் பொருளாதாரம் மீட்சி நிலைக்குத் திரும்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் ஸ்திரத்தன்மை நிலவ ஆரம்பித்துள்ளது. இதனால் மீண்டும் பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏறத் துவங்கியுள்ளன.
சில தினங்களுக்கு முன் பேரலுக்கு 70 டாலராக இருந்த கச்சா எண்ணெயின் விலை, இன்று 72 டாலராக உயர்ந்துள்ளது.
இந்த நிலை மேலும் தொடரும் என்றும் கூறப்படுகிறது.
இதனால் எண்ணெய் உற்பத்தியை மேலும் அதிகரிக்கப் போவதாக குவைத்தும், ஈரானும் அறிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications