பிரபாகரன் சித்திரவதை செய்து படுகொலை; இளைய மகன் கொடூரக் கொலை-மனித உரிமை அமைப்பு

பிரபாகரனைக் கொல்வதற்கு முன்பாக அவரது இளைய மகன் பாலச்சந்திரனை (வயது 12) பிரபாகரன் கண் முன்பாகவே கொடூரமாக சுட்டுக் கொன்றது ராணுவம் என்று டெல்லியைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் என்ற மனித உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபாகரன் தொடர்பாக இன்னும் கூட முழுமையான, தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் என்ற சுயேச்சையான மனித உரிமை அமைப்பு புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை ராணுவத்திலிருந்து ரகசியமாக திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பதாக அது தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ...
இலங்கை ராணுவத்தின் மிக முக்கிய வட்டாரத்திலிருந்து கிடைத்துள்ள நம்பகத்தன்மையான தகவல் இது. வேலுப்பிள்ளை பிரபாகரனை உயிருடன் பிடித்துள்ளது ராணுவம். பின்னர் அவரை ராணுவ முகாம் ஒன்றுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அனேகமாக இது ராணுவத்தின் 53வது படைப் பிரிவின் தலைமையகமாக இருக்கலாம்.
அங்கு முக்கிய தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் மற்றும் முக்கிய ராணுவ தளபதி ஒருவர் முன்னிலையில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர்.
இந்த சித்திரவதையை ராணுவத்தினர் கூடி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர்.
பிரபாகரனுடன் சேர்த்து பிடிக்கப்பட்ட அவரது 12 வயதே ஆன இளைய மகன் பாலச்சந்திரனையும் ராணுவத்தினர் சித்திரவதை செய்துள்ளனர். பின்னர் பிரபாகரன் கண் முன்பாக பாலச்சந்திரனை நிறுத்தி படுகொலை செய்துள்ளனர்.
அதன் பின்னர்தான் பிரபாகரனை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர். அவ்வாறு சுட்டபோது அவரது தலையின் பின் பக்கம் பிளந்து விட்டது.
மேலும், கடைசி நேர சண்டை நடந்த போரற்ற பகுதியில் சிக்கியிருந்த விடுதலைப் புலிகள் யாருமே உயிருடன் மிஞ்சவில்லை. அனைவருமே படுகொலை செய்யப்பட்டு விட்டனர்.
இந்தக் கொலைகள் தொடர்பாக ராணுவத்திடமிருந்து உண்மையான தகவல்கள் வெளி வர வாய்ப்பில்லை. எனவே உண்மை நிலவரத்தை வெளியில் கொண்டு வர பாரபட்சமற்ற, விரிவான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications