இலங்கை அமைச்சரின் வெறிப் பேச்சு!
கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு கூஜா தூக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களை காற்று கூட புகாத அறைக்குள் வைத்துப் பூட்ட வேண்டும் என இனவெறிப் பேச்சு பேசியுள்ளார் இலங்கை அமைச்சர் மெர்வின் சில்வா.
இலங்கை நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில்,
இந்த நாட்டில் தோல்வியுறாத மன்னனாக அதிபர் ராஜபக்சேவை காண்கிறேன். பிரபாகரன் கொல்லப்பட்டதால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன்.
நமது பிள்ளைகள் நிம்மதியாக பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். நமது பிள்ளைகள் பயம் இன்றி பள்ளி செல்கின்றனர். நமது அதிபர் அச்சமற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புலிகளுக்கு கூஜா தூக்கியவர்கள். அவர்களை காற்றுப் புக முடியாத அறைக்குள் வைத்து பூட்ட வேண்டும்.
இந்த நாட்டின் எல்லாளனுக்கு எவரும் உதவக் கூடாது, அவ்வாறு உதவி செய்தவர்ளை நாம் அடையாளம் காண வேண்டும். இந்த நாட்டின் தோல்வியுறாத மன்னர் மகிந்த ராஜபக்ச மட்டுமே என்றார் அவர்.












Click it and Unblock the Notifications