தமிழகத்தில் 5 எஸ்.பிக்கள் இடமாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்கிறது. நேற்று ஐந்து கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டனர்.
2 நாட்களுக்கு முன்புதான் 9 கண்காணி்ப்பாளர்கள் மாற்றப்பட்டனர். இந்த நிலையில் மேலும் ஐந்து பேர் மாற்றப்பட்டுள்ளனர்.
- சென்னை (தெற்கு) போக்குவரத்து போலீஸ் துணை ஆணையர் மனோகரன் மதுரை புறநகர் மாவட்ட கண்காணிப்பாளராக சூப்பிரண்டாக மாற்றப்பட்டார்.
- மதுரை எஸ்.பி. பாலகிருஷ்ணன் தேனி மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
- தேனி மாவட்ட எஸ்.பி. தேன்மொழி மதுரை நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருச்சி ரயில்வே எஸ்.பி. சின்னச்சாமி திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பாரி நாமக்கல் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications