பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த நோவார்ட்டிஸ்!
உலக நாடுகள் பலவற்றையும் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது நோவார்ட்டிஸ் நிறுவனத்தின் இந்த புதிய தயாரிப்பு.
பன்றி்க் காய்ச்சல் என்பது உலகம் முழுக்க பரவியுள்ளதாக நேற்றுதான் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
இந்தக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து (வாக்சீன்) கண்டுபிடிக்கும் முயற்சிகளில் உலகின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தன. இவற்றில் முதல் தடுப்பு மருந்தை நோவார்டிஸ் உருவாக்கி வெற்றி பெற்றுள்ளது. நோவார்ட்டிஸின் ஜெர்மன் தொழிற்சாலையில் இந்த மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
பல மில்லியன் டோஸ் மருந்துகளை அதிவிரைவில் உற்பத்தி செய்யும் வசதி கொண்டது இந்த தொழிற்சாலை என்பதால் உலகம் முழுக்க தடுப்பு மருந்து சப்ளை செய்வது எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
விரைவில் இந்த மருந்தை சோதனை செய்யவுள்ள நோவார்ட்டிஸிடம், அமெரிக்கா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகள் லட்சக்கணக்கான டோஸ் தடுப்பு மருந்துகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளன.