For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சி அருகே 100வது சமத்துவபுரம் - திறக்கிறார் மு.க.ஸ்டாலின்

By Staff
Google Oneindia Tamil News

Samadhuvapuram near Trichy
திருச்சி: தமிழகத்தின் 100 வது சமத்துவபுரத்தை திருச்சி மாவட்டம் தாழம்பட்டியில் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.

அவர் இன்று ஜூன் 14ம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் குளித்தலை திமுக எம்.எல்.ஏ. மாணிக்கம் இல்ல திருமணவிழாவில் கலந்து கொண்டார்.

மாலை 5 மணிக்கு மருங்காபுரி ஒன்றியம் தாழம்பட்டியில் ரூ 2.23 கோடியில் கட்டப்பட்டுள்ள தமிழகத்தின் 100வது சமத்துவபுரத்தை தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

மேலும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பின்பு, கார் மூலம் தஞ்சாவூர் செல்லும் அவர், இரவு அங்கு தங்குகிறார்.

மறுநாள் காலை 11 மணிக்கு நாகப்பட்டிணம் மாவட்டம் வேதாரண்யம் தோப்புதுறை தோத்தக்குடியில் நடக்கும் திமுக பொதுக்குழு உறுப்பினர் சே.யூசுப் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X