புதுச்சேரியில் 'ஹெல்மெட் ஊழல்'-சிபிஐ விசாரணை!
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி காவல் துறையினருக்கு ஹெல்மெட்கள் வாங்கியதில் பெரும் ஊழல் நடந்துள்ளது.
இது குறித்து சிபிஐ விசாரணையில் இறங்கியுள்ளது.
இதில் புதுச்சேரி காவல்துறையின் தலைமை அலுவலக எஸ்பியான ராமச்சந்திரனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதால் அவரது அலுவலகம், வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது. அப்போது பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
அதே போல இந்த ஊழலில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர், எஸ்ஐ ஆகியோரின் வீடுகளிலும் சிபிஐ சோதனை நடத்தியது.
இந் நிலையில் எஸ்பி ராமச்சந்திரனை கட்டாய விடுப்பில் செல்லுமாறு புதுச்சேரி டிஜிபி ஏ.கே.வர்மா உத்தரவிட்டார். இதையடுத்து அவர் விடுப்பில் சென்றார்.
இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications