4 தொகுதி இடைத் தேர்தல்: அதிமுக புறக்கணிக்க ராமதாஸ் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

Ramadoss
திண்டிவனம்: தமிழகத்தில் நடைபெறவுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும் அதிமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தைலாபுரம் தோட்டத்தில் இன்று நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,

ஈழத்தில் தமிழர்களைக் காக்கத் தவறிவிட்ட திமுக அரசு இப்போது அங்கு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரவும் தவறிவிட்டது.

அதே போல 3 ஆண்டுகளாக நிலவும் மின்வெட்டையும் போக்க எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.

மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றுள்ள திமுக இனி தமிழகத்தில் நடக்கவுள்ள 4 சட்டமன்ற இடைத் தேர்தல்களில் நிச்சயம் பணத்தைக் கொட்டும்.

நிச்சயமாக தேர்தல் முறையாக நடக்கப் போவதில்லை. வழக்கமாக வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து தேர்தலை எதிர்கொள்ளும் திமுகவே இப்போதே இந்த நான்கு தொகுதிகளிலும் வென்றுவிட்டதாக அறிவித்துவிடலாம்.

இந்த இடைத் தேர்தலை எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+