ஆசிட் வீசி விவசாயி கண்ணை பறித்த பெண்
நாகர்கோவில்: குமரி மாவட்டம் குலசேகரம் அருகேயுள்ள அஞ்சுகண்டகரை பொறநல்லூரை சேர்ந்த விவசாயி கிரிஜக்குமார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சாமுவேல். இவரது மனைவி மரிய நேசம்.
கிரிஜக்குமாருக்கு சொந்தமான நிலத்தை சாமுவேல் விலைக்கு கேட்டார். ஆனால் கிரிஜக்குமார் நிலத்தை கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் சமுவேல் குடும்பத்துக்கும், கிரிஜகுமார் குடும்பத்துக்கும் விரோதம் ஏற்பட்டது.
இந் நிலையில் நேற்று மாலை வயலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த கிரிஜக்குமாரிடம் சாமுவேலின் மனைவி மரியநேசம், அவரது தம்பி நடராஜன் ஆகியோர் தகராறு செய்துள்ளனர்.
இதனால் 2 தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மரியநேசம் வீட்டில் வைத்திருந்த ஆசிட்டை எடுத்து வந்து கிரிஜக்குமாரின் முகத்தில் வீசினார்.
இதில் கி்ரிஜகுமாரின் கண்ணில் ஆசிட் பட்டு அந்த கண் பறிபோனது. மேலும் முகமும் வெந்தது. வலி தாங்கமல் துடித்த கிரிஜக்குமார் குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிட் வீசிய மரியநேசத்தை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications