வாழை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து 5 பெண்கள் பலி
தொட்டியம்: தொட்டியம் அருகே வாழக்காய் ஏற்றிச் சென்ற வேன் கவிழந்து 5 பெண்கள் உடல் நசுங்கி பரிதாமாக பலியானார்கள்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கார்த்திகை பட்டியைச் சேர்ந்தவர் மணிவேல்.
இவரது வேனில் வாழைக்காய் ஏற்றிக் கொண்டு காவிரி கரை ஓரமாக எம்.புத்தூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
வாழைக்காய் லோடு மேல் பெண் தொழிலாளர்கள் உட்கார்ந்து கொண்டு சென்றனர்.
அப்போது, முள்ளிக்கரை என்ற இடத்தில் வேன் வந்த போது எதிர்பாராத விதமாக காவிரி கரைக்கு மறு பக்கம் உள்ள வாய்க்கால் கரையில் திடீரென கவிழ்ந்தது.
இதில் வேனில் இருந்த பெண்கள் வேனின் அடிப்பாகத்தில் சிக்கினர்.
இந்த விபத்தில் அரசலூர் தங்கராசு மனைவி இந்திராணி(47), மகேஸ்வரன் மனைவி சுதா(35), பழனியாண்டி மனைவி ஜெயமணி(30), காத்தான் மனைவி
செல்லாயி(வயது50), வையமலை மனைவி கலாமணி(45) ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள்.
இடிபாடுகளில் சிக்கிய 4 பெண்கள் மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிந்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்துக்கு காரணமான தப்பி ஓடிய வேன் டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications