புழல் சிறைக்குள் கஞ்சா கடத்திய வார்டன் கைது! சென்ன
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை புழல் மத்திய சிறைக்குள் கஞ்சா கடத்திய ஜெயில் வார்டன் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தின் பல சிறைகளிலும் சிறைத்துறை ஊழியர்களே போதை பொருட்கள், சிகரெட், உணவு, பணம், செல்போன்கள், கத்தி ஆகியவற்றை கைதிகளுக்கு கடத்திச் சென்று கொடுத்து வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது.
இந் நிலையில் புழல் சிறையில் வார்டனாக பணியாற்றும் பாலகிருஷ்ணன் (50) நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றபோது அவரை ஜெயில் எஸ்பி ராஜேந்திரன், டிஎஸ்பி கருப்பண்ணன் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.
அப்போது பாலகிருஷ்ணனின் ஷூவில் 49 பொட்டலங்கள் கஞ்சா, 3 பாக்கெட் சிகரெட், 3 பாக்கெட்டுகள் மூக்கு பொடி மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications