பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தம்: கேரளா மீண்டும் பேசனுமாம்..
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தம் குறித்து தமிழக, கேரள அமைச்சர்கள் மட்டத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.
கேரள சட்டசபையில் இத் திட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,
பரம்பிக்குளம்-ஆழியாறு நதி நீர் ஒப்பந்தம் குறித்து தமிழகத்துடன் கேரள அரசு மீண்டும் ஆய்வு செய்யும். கேரள மாநிலத்தின் நலனை, பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ஒப்பந்தம் குறித்து 1989ம் ஆண்டு முதல் இப்போது வரை இரு மாநில முதல்வர்கள், நீர்ப்பாசன அமைச்சர்கள், அதிகாரிகள் பலமுறை கூடி விவாதித்தும் இதுவரை ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.
இதனால் மீண்டும் இரு மாநில அமைச்சர்கள் கூடி பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications