ரூ. 1 லட்சம் கள்ள நோட்டு-அதிர்ந்த ரிசர்வ் வங்கி
சென்னை: சென்னை டாஸ்மாக் மதுக் கடையில் வசூலான பணத்தில் ரூ. 1 லட்சம் அளவுக்கு கள்ள நோட்டுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெரியமேடு டாஸ்மாக் கடைக்கு சில நாட்களுக்கு முன்பு முகம்மது அம்ருதீன் என்பவர் வந்தார். ஜார்க்கண்டைச் சேர்ந்த அவர் ரூ. 1 லட்சம் பணத்தைக் கொடுத்து சரக்கு வாங்கினார்.
இவ்வளவு பெரிய தொகையை கொடுக்கிறாரே என்ற சந்தேகத்தில் போலீஸாருக்குத் தகவல் போனது. அவர் கொடுத்தது கள்ள நோட்டாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.
ஆனால் வங்கியில் இந்தப் பணத்தைக் காட்டிய போலீஸார், அத்தனையும் நல்ல நோட்டுத்தான் என்று கூறியதைத் தொடர்ந்து கடைக்காரர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு சரக்கைக் கொடுத்து அனுப்பினர்.
ஆனால் தற்போது இந்தப் பணம் பக்கா கள்ள நோட்டு என்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடையாளமே காண முடியாத அளவுக்கு இந்த கள்ள நோட்டுக்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்த கள்ள நோட்டு விவகாரம் குறித்து சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றப்படவுள்ளது. இந்த கள்ள நோட்டுக்களை அச்சடித்தது யார், எங்கு அச்சடிக்கப்பட்டது என்பது குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரிக்கவுள்ளனர்.
-
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு











Click it and Unblock the Notifications