பங்குகளில் ரூ.50000 கோடி முதலீடு செய்யும் எல்ஐசி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ரூ.50000 கோடியை பங்குகளில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி).
கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.10000 கோடி இந்த ஆண்டு அதிகமாக முதலீடு செய்யப்படுகிறது.
இதுகுறித்து எல்ஐசி சேர்மன் டிஎஸ் விஜயன் கூறுகையில், "கடந்த ஆண்டு ரூ.40800 கோடியை பங்குகளில் முதலீடு செய்தோம். இந்த ஆண்டு அதை ரூ.50000 கோடிக்கு மேல் உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இந்த நிதியாண்டு துவங்கியதிலிருந்து இதுவரை ரூ.8000 கோடி வரை முதலீடு செய்துள்ளோம்.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 20 சதவிகித கூடுதலாக வருமானம் ஈட்ட வேண்டியுள்ளதாலேயே முதலீட்டை அதிகரித்துள்ளோம்.
பல்வேறு காப்பீட்டு முனைமம் (பிரிமியம்)எல்ஐசியின் கடந்த நிதியாண்டு வருவாய் ரூ.1,55,000 கோடியாக இருந்தது என்றார்.












Click it and Unblock the Notifications