கிழிந்த, அழுக்கான ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டுமா?
Subscribe to Oneindia Tamil
சேலம்: அழுக்கான , கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான முகாம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் சேலத்தில் ஜூன் 25ம் தேதி முதல் ஜூன் 27ம் தேதி வரை நடைபெறுகின்றது.
இது குறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் கல்யாணராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பாரத ரிசர்வ் வங்கியின் பவள விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி அழுக்கான , கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாம், சேலம் மாநகராட்சி பூங்காவில் ஜூன் 25ம் தேதி முதல் ஜூன் 27ம் தேதி வரை நடைபெறுகின்றது.
இந்த முகாமை, ஜூன் 25ம் தேதி அன்று ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் கே.ஆர்.ஆனந்தா துவக்கி வைக்கிறார் என்றார்.












Click it and Unblock the Notifications