பனியன் நிறுவனத்தில் துணி திருடிய 4 பேர் கைது
திருப்பூர்: திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் துணியைத் திருடிய 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர், வேலம்பாளையம் சொர்ணபுரி லே-அவுட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (34). இவர் பாளையக்காடு பகுதியில் காம்பாக்டிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இவரது நிறுவனத்தில் ரூ 2.10 லட்சம் மதிப்புள்ள 1000 கிலோ வெள்ளை பனியன் துணி காணாமல் திடீரென போனது. இது குறித்து இவர் வடக்கு காவல் நிலையத்தில்
புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், காம்பாக்டிங் நிறுவனத்தில் இருந்து ஆட்டோ மூலமாக நான்கு பேர் பனியன் துணியை திருடிச் சென்று குடோனில் பதுக்கி வைத்து, பின்பு, அதை ஆட்டோ மூலம் வெளியே எடுத்து சென்ற போது கையும் களவுமாக பிடிபட்டனர்.
போலீசார் விசாரணையில், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த சுபாஷ் (27), சுரேஷ் (29), சேரமங்கலம் பகுதியை சேர்ந்த பிரதீப் (29)
மற்றும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்(24) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications