ப.சிதம்பரம்-ரித்தீஷ் வெற்றியை எதிர்த்து வழக்கு

அதே போல ராமநாதபுரத்தில் போட்டியிட்டு வென்ற திமுக வேட்பாளர் ஜே.கே.ரித்தீஷ் இலங்கையில் பிறந்தவர். அவர் இந்தியக் குடிமகன் என்று பொய்யான சான்றளித்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். எனவே அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ராமநாதபுரம் தொகுதியில் தோல்வியுற்ற அதிமுக வேட்பாளர் சத்தியமூர்த்தி வழக்கு தொடர்ந்துள்ளார்.
ராஜ கண்ணப்பன்...
ராஜ கண்ணப்பன் இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நேரில் வந்து தலைமைப் பதிவாளரிடம் வழக்கை தாக்கல் செய்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த 15வது மக்களவை தேர்தலில் நான் அதிமுக சார்பில் சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட்டேன். அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிட்டார்.
அவர் ஏறத்தாழ 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அந்த தொகுதிக்குட்பட்ட ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் எனக்கு பதிவான சுமார் 1,400 வாக்குகள் சிதம்பரத்திற்கு பதிவானதாக தவறாக கணக்கிடப்பட்டது.
கடைசி நேரத்தில் வாக்கு எண்ணிக் கையில் ஈடுபட்ட ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டார்கள். கடைசி நேரத்தில் நடந்த வாக்கு எண்ணும் பணியில் வங்கி ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக என்னுடைய வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டது.
எனவே, சிவகங்கை மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும். சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவித்து அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
ரித்தீஷ் வெற்றியை எதிர்த்து வழக்கு:
அதே போல ரித்தீஷ் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான சத்தியமூர்த்தி வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்
திமுக சார்பில் போட்டியிட்ட ரித்தீஷ் ஒரு சாதாரண நடிகர். சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால், அவர் இந்தத் தேர்தலில் ரூ. 25 கோடிக்கு மேல் செலவு செய்தும், தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்தும் வெற்றி பெற்றுள்ளார்.
ஓட்டுக்களைப் பெற பல இடங்களில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. ஆரத்தி எடுப்பவர்களுக்கு 100 ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரியாங்குடி கிராமத்தில் அம்மன் கோவில் கட்டித் தருவதாக ரித்தீஷ் உறுதியளித்துள்ளார். அதற்காக கட்டுமானப் பொருட்களை ஏற்றி வர, அவரது வாகனங்கள் யன்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் பிறந்தவர் ரித்தீஷ். இந்திய குடிமகன் என தவறான தகவல் அளித்து, தேர்தலில் மனு தாக்கல் செய்துள்ளார். எனவே, எம்பி தேர்தலில் போட்டியிடும் தகுதி அவருக்கு இல்லை. இது, தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல். எனவே, ரித்தீஷ் வெற்றி பெற்றது செல்லாது என உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்!












Click it and Unblock the Notifications