பெட்டி.. சென்னை விமான நிலையத்தில் பீதி
சென்னை: சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பெட்டியால் வெடிகுண்டுப் பீதி ஏற்பட்டது. ஆனால், அந்தப் பெட்டியில் 165 வாஸ்து மீன்கள் இருந்தன.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு நேற்று சிங்கப்பூரில் இருந்து விமானம் வந்தது. அதில் இருந்த பயணிகள் இறங்கிய பிறகு அவர்களுக்கான உடைமைகள் மற்றும் சூட்கேஸ்கள் கன்வேயர் பெல்ட்டில் வந்தன.
பயணிகள் அனைவரும் தங்கள் உடைமைகளை எடுத்துச் சென்ற நிலையில் ஒரே ஒரு சூட்கேஸ் மட்டும் அங்கேயே அனாதையாகக் கிடந்தது. அது யாருடையது என்ற விவரமும் சூட்கேசில் இல்லை,
இதனால் அதில் வெடிகுண்டு இருக்குமோ என்ற பீதி ஏற்பட்டது. விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பெட்டி விமான நிலையத்தி்ன் ஒரு மூலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சூட்கேசை ஆய்வு செய்து குண்டு ஏதும் இல்லை என்பதை உறுதி செய்த பின் திறந்து பார்த்தனர்.
அதில் 3 பாலிதீன் பைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு 165 வாஸ்து மீன்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
அதை யாரோ கடத்தி வந்து அதிகாரிகளுக்கு பயந்து விட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பெட்டியை அதிகாரிகள் சிங்கப்பூருக்கே திருப்பி அனுப்பினர்.
-
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள்












Click it and Unblock the Notifications