பெட்டி.. சென்னை விமான நிலையத்தில் பீதி
சென்னை: சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பெட்டியால் வெடிகுண்டுப் பீதி ஏற்பட்டது. ஆனால், அந்தப் பெட்டியில் 165 வாஸ்து மீன்கள் இருந்தன.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு நேற்று சிங்கப்பூரில் இருந்து விமானம் வந்தது. அதில் இருந்த பயணிகள் இறங்கிய பிறகு அவர்களுக்கான உடைமைகள் மற்றும் சூட்கேஸ்கள் கன்வேயர் பெல்ட்டில் வந்தன.
பயணிகள் அனைவரும் தங்கள் உடைமைகளை எடுத்துச் சென்ற நிலையில் ஒரே ஒரு சூட்கேஸ் மட்டும் அங்கேயே அனாதையாகக் கிடந்தது. அது யாருடையது என்ற விவரமும் சூட்கேசில் இல்லை,
இதனால் அதில் வெடிகுண்டு இருக்குமோ என்ற பீதி ஏற்பட்டது. விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பெட்டி விமான நிலையத்தி்ன் ஒரு மூலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சூட்கேசை ஆய்வு செய்து குண்டு ஏதும் இல்லை என்பதை உறுதி செய்த பின் திறந்து பார்த்தனர்.
அதில் 3 பாலிதீன் பைகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு 165 வாஸ்து மீன்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
அதை யாரோ கடத்தி வந்து அதிகாரிகளுக்கு பயந்து விட்டுச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பெட்டியை அதிகாரிகள் சிங்கப்பூருக்கே திருப்பி அனுப்பினர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!












Click it and Unblock the Notifications