இராக்-பயங்கர குண்டுவெடிப்பில் 72 பேர் பலி
பாக்தாத்: ஷியாக்கள் அதிகம் வசிக்கும் இராக்கின் வட பகுதியில் உள்ள சதர் நகரான நடந்த பயங்கர குண்டுவெடிபபில் 72 பேர் பலியாயினர்.
ஒரு ரிக்ஷாவில் குண்டுகளை நிரப்பி அதன் மீது காய்கறிகளை வைத்து அதை நகரின் முக்கிய மார்க்கெட்டில் நிறுத்திய தீவிரவாதிகள் ரிமோட் மூலம் வெடிக்கச் செய்தனர்.
இதில் அந்த மார்க்கெட்டே சிதறிப் போனது. கடைகள் இடிந்து நொறுங்கின. பல கார்கள் தூக்கி வீசப்படடன. கடைகள் தீ பிடித்து எரிந்தன. இந்த சம்பவத்தில் 72 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர்.
மேலும் 150 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஈராக்கில் இந்த ஆண்டு நிகழ்ந்த மிக, மிக மோசமான குண்டு வெடிப்பாக இது கருதப்படுகிறது.
சம்பவம் நடந்த இந்த நகரம் ஷியா இன முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியாகும்.
ஈராக் பிரதமர் நவரி மாலிக் கூறுகையில், இத்தகைய வன்முறை காரணமாக இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவது தாமதமாகாது. திட்டமிட்டப்படி 2011ம் ஆண்டுக்குள் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறி விடும் என்றார்.