ஈராக்-30ம் தேதி முதல் யுஎஸ் படைகள் வெளியேற்றம்
பாக்தாத்: ஈராக்கிலிருந்த அமெரிக்க படைகள் வரும் 30ம் தேதி முதல் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற துவங்குகின்றன. இதை கொண்டாடும் விதமாக ஈராக் வரும் 29ம் பொது விடுமுறை அறவித்துள்ளது.
ஈராக் அணு ஆயுதம் தயாரிப்பதாகவும், ராசாயன ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறி அமெரிக்கா குற்றம்சாட்டியது. அதே நேரத்தில் ஈராக் அதிபர் சதாம் உசேனும் அந்நாட்டில் இருக்கும் அணு ஆயுதங்களை சோதனையிட அனுமதி மறுத்துவிட்டார்.
இதையடுத்து அமெரிக்கா, ஈராக் மீது படையெடுத்தது. சதாம் உசேன் கைது செய்யப்பட்டு கடந்த 2006, டிசம்பர் 30ம் தேதி தூக்கிலிடப்பட்டார்.
இதை தொடர்ந்து அமெரிக்க அரசு, ஈராக்கில் புதிய ஆட்சியை ஏற்படுத்தியது. ஆனால், அங்கு தொடர்ந்து தற்கொலை படை தாக்குதல் உள்ளிட்ட தீவிரவாத சம்பவங்கள் அதிகரித்து வந்ததால் அமெரிக்கா தனது படைகளை அங்கேயே நிறுத்தி வந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன், ஈராக் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. அதன்படி அமெரிக்கா வரும் 30ம் தேதி முதல் தனது படைகளை கொஞ்சம் கொஞ்சமாக வாபஸ் வாங்க இருக்கிறது.
வரும் 2011 இறுதியில் மொத்த அமெரிக்க படையும் நாடு திரும்பிவடும் என கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அமெரிக்க ராணுவம் கடந்த இரண்டு வாரங்களாக செய்து வருகிறது.
மேலும், அதன் பின்னர் அங்கு இருக்கும் மற்ற அமெரிக்க படைகள் ஈராக் நாட்டின் நகரங்களுக்கு வெளியில் முகாமிட்டிருக்கும், ஈராக் அரசு உதவி கேட்டால் மட்டும் நகரங்களுக்குள் நுழையும் என தெரிகிறது.
தங்கள் நாட்டை ஆக்கிரமித்து இருப்பதாக அமெரிக்க படைகள் நாடு திரும்பவது தங்களுக்கு கிடைத்த வெற்றி என தற்போதைய ஈராக் பிரதமர் நூரி அல் மேலிகி தெரிவித்துள்ளார். மேலும், இதை விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ள ஈராக் அரசு வரும் 29ம் தேதி பொது விடுமுறை அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈராக்கில் வன்முறை, தற்கொலை படை தாக்குதல் சம்பவம் குறைந்து வந்த நிலையில், தற்போது அமெரிக்க ராணுவம் வெளியேறும் செய்தி அறிந்தவுடன் அதிகரித்துள்ளன. நேற்று பாக்தாத் மார்கெட் பகுதியில் நடந்து குண்டுவெடிப்பில் சுமார் 72 பேருக்கு பலியாயினர்.
அமெரிக்க படைகள் திரும்பும் நிலையில் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நிகழாமல் பார்த்து கொள்ள வேண்டியது ஈராக் பிரதமர் நூரி அல் மேலிகிக்கு பெரும் சவாலாக இருக்கும் என கருதப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications