ஓரிரு நாளில் பெட்ரோல், டீசல் விலை உயரும் - அமைச்சகம்
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அமைச்சக அதிகாரிகள் சிலர் கூறுகையில், விரைவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும். தொடர்ந்து விலைக் குறைப்பை கடைப்பிடிக்காத அளவுக்கு நிலைமை உள்ளது.
விரைவில் விலை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
இருப்பினும் ஒட்டுமொத்தமாக விலை உயர்வு வாடிக்கையாளர்கள் மீது சுமத்தப்பட மாட்டாது. சில மானியச் சலுகைகள் தொடரும்.
இருப்பினும் மண்ணெண்ணை மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயரும் வாய்ப்பு இல்லை.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால்தான் இந்த முடிவை எடுக்க நேரிட்டுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications