சென்னையில் மேலும் 3 பேருக்கு பன்றிக் காய்ச்சல்

ஆஸ்திரேலியிலாவிருந்து இவர்கள் இருவரும் நேற்றுதான் சென்னை திரும்பியிருந்தனர். விமான நிலையப் பரிசோதனையின்போது இருவருக்கும் பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து இருவரும் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல சிங்கப்பூரிலிருந்து வந்த 24 வயது இளைஞர் பன்றிக் காய்ச்சல் அறிகுறி காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவுதான் இவர் சிங்கப்பூரிலிருந்து திரும்பினார். குடும்பத்தினருடன் வந்திறங்கிய அவருக்கு சளியும், காய்ச்சலும் இருந்தது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
அவரை டாக்டர்கள் குழு பரிசோதித்தது. இதைத் தொடர்ந்து இன்று அவர் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏற்கனவே சமீபத்தில் ஒரு தம்பதி சென்னையில் பன்றிக் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மதுரையில் ஒரு சிறுவன் அனுமதிக்கப்பட்டான். இந்த நிலையில் மேலும் 3 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications