கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் பெற்றோரிடம் நகை, பணம் பறிப்பு
சென்னை: முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷின் பெற்றோரிடம் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள நகை, பணம் திருடப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க வீரராக சில டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடியவர் ரமேஷ். தமிழ்நாடு ரஞ்சிப் போட்டிகளிலும் ஆடியுள்ளார்.
தற்போது கிரிக்கெட் ஆடுவதிலிருந்து விலகியிருக்கிறார். இவரது பெற்றோர் மடி்பாக்கத்தில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மடிப்பாக்கத்திலிருந்து 70 கே டவுன் பஸ்சில் ரமேஷின் தந்தை சடகோபன் தனது மனைவியுடன் பயணம் செய்தார். கையில் வைத்திருந்த பையில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் வைத்திருந்தனர்.
பஸ்சில் கூட்ட நெரிசல் இருந்தது. இந்த நிலையில் தனது ஸ்டாப்பிங் வந்து இறங்கியபோது பை கிழிந்திருந்ததைப் பார்த்து அதிர்ந்தனர் ரமேஷின் பெற்றோர். அதில் இருந்த நகை, பணத்தைக் காணவில்லை.
இதுகுறித்து மடிப்பாக்கம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார் சடகோபன்.












Click it and Unblock the Notifications