திருச்செந்தூர் கும்பாபிஷேகம் - இன்டர்நெட்டில் நேரடி ஒளிபரப்பு

அறுபடைவீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியாசாமி கோயிலில் கும்பாபிஷேகம் ஜூலை 2ம் தேதி நடைபெறுகிறது.
இதில் வெளிநாடு, வெளிமாநிலங்களில் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பாபிஷேகத்தை பக்தர்கள் நெரிசலின்றி காணும் வசதியாக கோயில் நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
இன்டர்நெட்டில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக www.tiruchendurmurugantemple.com என்ற இணைய தளம் பிரத்யோகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் இணைய தளத்தில் யாகசாலை பூஜை, உள்ளிட்ட கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடர்பான படங்கள், மற்றும் செய்திகள் உடனுக்குடன் நேரடியாக வெளியிடப்படுகின்றன.
இந்த இணைய தளம் சென்னை சிடிஎஸ் குழுவினரால் உருவாக்கப்பட்டுள்ளது. இணையதள சேவையை சிடிஎஸ் குழுமத்தின் தலைவர் தேவதாச சுந்தரம், நிர்வாக இயக்குனர் பிடி் சுந்தர் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர்.
வெப்சைட் ஓபன் ஆனவுடன் திருச்செந்துர் முருகன் படம் மட்டும் கோயில் கோபுரம் மற்றும் அதை ஓட்டிய கடல் போன்றவையும் அதை தொடர்ந்து பின்னனி இசையாக ஓம் என்ற மந்திரம் ஓலிக்கிறது.
இவை அருமையாக இருந்தாலும் திருச்செந்தூர் கோயிலுடன் கூடிய சுவாமி படம் தலைகீழாக தெரிகிறது. இதை சரிசெய்வது அவசியம் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications